திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

Published : Sep 15, 2022, 04:23 PM ISTUpdated : Sep 15, 2022, 04:25 PM IST
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்த விசாரணையில், ''பாகல மண்டலம் பட்டிப்படிவாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்துக்கும், மதனப்பள்ளி சந்திரா காலனியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 12ம் தேதி (திங்கட்கிழமை) திருமணம் நடந்ததுள்ளது. முதலில் காதலித்த போது பெரியவர்கள் இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்து வைத்துள்ளனர். 

திருமணத்திற்கு பின், குடும்ப பெரியவர்கள் சம்பிரதாயப்படி முதல் இரவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில், துளசி பிரசாத் தனது அறையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்த துளசி பிரசாத்தின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மணமகன் இறந்ததால் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!