புதுச்சேரியிலும் அனைத்து கட்சி கூட்டம் – களத்தில் குதிக்கும் நாராயணசாமி

 
Published : Oct 26, 2016, 03:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
புதுச்சேரியிலும் அனைத்து கட்சி கூட்டம் – களத்தில் குதிக்கும் நாராயணசாமி

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டாதது வருத்தமளிக்கிறது. தேவைப்பட்டால் புதுச்சேரியிலும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

இரவு 9 மணி.. ஹோட்டலில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கதறல்.. நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
லவ் பண்றேன்னு சொல்லி இப்படி என்னை ஏமாத்திட்டியே! ப்ளீஸ் என்ன விட்டுடு! கதறியும் விடாமல் நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.!