டெல்லி - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களை தாக்கிய பயணி ஒருவரால் பரபரப்பு!!

Published : Apr 10, 2023, 02:27 PM IST
டெல்லி - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களை தாக்கிய பயணி ஒருவரால் பரபரப்பு!!

சுருக்கம்

டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொண்ட காரணத்தால், வேறு வழியின்றி பயணித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. 

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.25 மணிக்கு லண்டனுக்கு 787 ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. பயணித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் 9.36 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவறான முறையில் ஒழுக்ககேடான வகையில் விமான ஊழியர்களிடம் நடந்து கொண்டார். இரண்டு விமான ஊழியர்களை தாக்கினார். இந்த தாக்குதல் மீண்டும் தொடர்ந்து லண்டன் வரை நீடிக்கக் கூடாது என்பதால் மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கு விமானம் திருப்பப்பட்டது. போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட பயணி ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு விமானத்தில் எழுத்து மற்றும் வாய்மொழியாக எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால், கேட்பதாக இல்லை. விமான ஊழியர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டார்'' என்றனர்.

தொடர்ந்து சமீப நாட்களில் விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பயணிகளும் அவ்வப்போது இதுகுறித்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.  

மது அருந்திய பயணியை ‘குடிகாரர்’ என்று சொல்லக்கூடாது: விமானப் பணிக்குழுவுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

கடந்தாண்டும் இதுபோன்று ஏர் இந்தியா விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்து இருந்தன. பயணி ஒருவர் மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்து இருந்தார். மற்றொரு சம்பவத்தில் பயணியின் காலி இருக்கையில் உடன் பயணித்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்து இருந்தார். இந்த இரண்டு சம்பவங்களிலும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளாத ஏர் இந்தியா விமானத்திற்கு டிஜிசிஏ அபராதம் விதித்து இருந்தது. இதையடுத்தே, இன்று நடந்த சம்பவத்திற்குப் பின்னர், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்ட விமானப் பயணி உடனடியாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் பேட்டியளித்து இருந்த ஏர் இந்தியா விமானத்தின் எம்டி - சிஇஓ கேம்ப்பெல் வில்சன், ''போதையில் சில பயணிகள் இதுபோன்று அடிக்கடி விமானத்தில் நடந்து கொள்கின்றனர். சிலர் குடித்துவிட்டு விமானத்தில் ஏறுகின்றனர். சிலர் வரி இல்லை என்ற காரணத்தினால், மதுபான வகைகளை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுகின்றனர். அப்படி வரும் பயணிகள் விமான ஊழியர்களிடம் அதிகமாக மது வழங்குமாறு கேட்கின்றனர். அவ்வாறு வழங்காதபோது, விமான ஊழியர்களுக்கு அதுமாதிரியான பயணிகள் மிரட்டல் விடுகின்றனர். சில நேரங்களில் தாக்குதலையும் நடத்துகின்றனர். இதுபோன்று பல்வேறு புகார்கள் தினமும் எங்களுக்கு வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார். 

Air India Urination:ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்:சிறுநீர் கழிப்பு விஷயத்தில் டிஜிசிஏ அதிரடி

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!