அகமதாபாத் விமான விபத்தில் மங்களூருவைச் சேர்ந்த விமானி உயிரிழப்பு!

Published : Jun 12, 2025, 06:47 PM IST
மங்களூருவைச் சேர்ந்த விமானி உயிரிழப்பு!

சுருக்கம்

Air India Flight Crash - Co Pilot Clive Kunder Died :  அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளானது. மங்களூரைச் சேர்ந்த முதல் அதிகாரி க்ளைவ் குந்தர் உட்பட 242 பேர் விமானத்தில் இருந்தனர். 

Air India Flight Crash - Co Pilot Clive Kunder Died : அகமதாபாத்தில் உள்ள மேக்னி நகர் குடியிருப்புப் பகுதியில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மங்களூரைச் சேர்ந்த, மும்பையில் வசிக்கும் முதல் அதிகாரி க்ளைவ் குந்தரும் பயணித்திருந்தார். போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு புறப்பட்டது. இதில் கேப்டன் சுமித் சப்ர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தரே இருவரும் விமான ஓட்டிகளான சென்றனர்.

கேப்டன் மற்றும் துணை விமானி:

அதுமட்டுமின்றி கேப்டன் சுமித் 8200 மணி நேரம் விமான அனுபவம் கொண்டவராகவும், துணை விமானி 1100 மணி நேர விமான அனுபவம் கொண்டவராகவும் இருந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 230 பயணிகள் மற்றும் 2 விமானி மற்றும் 10 பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தை க்ளைவ் மற்றும் சுமீத் ஆகியோரே இயக்கினர்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. பயணி எண் 12 என்று அவர் பட்டியலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். விபத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் அவசரகால சேவைகள் விரைவாக செயல்படுத்தப்பட்டன. விமானம் தீப்பிடித்து எரிந்தது, பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து அடர்ந்த புகை காணப்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா உறுதிப்படுத்தினார். 

விபத்து குறித்து விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு குழுவை நியமித்துள்ளது.விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தின் செயல்பாடுகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டு, மாலையில் மீண்டும் தொடங்கப்பட்டன. "SVPIA விமான நிலையத்தில் அனைத்து விமானச் செயல்பாடுகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மும்பையை சேர்ந்த பணிப்பெண்கள்:

மும்பையைச் சேர்ந்த ஷ்ரதா தவான், அபர்ணா மகாதிக் உள்ளிட்ட மூத்த விமானப் பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர். சைனிதா சக்ரவர்த்தி, நகந்தோய் கோங்ப்ரைலதபம் சர்மா, தீபக் பதக், மைதிலி படேல், இர்ஃபான் ஷேக், லம்னும்தம் சிங்சன், ரோஷ்னி சங்கரே ராஜேந்திரா, மனீஷா தாபா ஆகியோரும் பணியில் இருந்தனர். இவர்கள் அனைவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அபர்ணா மகாதிக் மும்பையைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் உறவினர் என்று கூறப்படுகிறது.

Clive Kunder Air India : https://x.com/mountain_rats/status/1933108762652643577

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!