
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதல் நடந்ததை அடுத்து, 85 பேரை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர். இதில், 78 பேருக்கு எதிராக விசாரணை தொடங்கியது. 13 வருடம் தொடர்ந்த விசாரணையில், கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 49 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது, மேலும் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியும், 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள 49 பேரின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜாஹித் ஷேக் – குஜராத், ஆசிப் ஷேக் – மகாராஷ்டிரா, அதீக் கில்ஜி – ராஜஸ்தான், இம்ரான் ஷேக் – குஜராத், இக்பால் – குஜராத், ஷேக்மி ஷேக் – குஜராத், ஜாவேத் – குஜராத், மெஹ்தி அன்சாரி – ராஜஸ்தான், ஷபீக் அன்சாரி - மத்திய பிரதேசம். ரஃபியதீன் – குஜராத், ஆரிஃப் மிர்சா - உத்தரப் பிரதேசம், கயூமுதீன் – குஜராத், சீபி முஸ்லிம் – கேரளா, சஃப்தர் நாகோரி – சென்ட்ரல், ஹபீஸ் முல்டா – கர்நாடகா, சஜித் மன்சூரி – குஜராத், அஃப்சத் அமானி – மகாராஷ்டிரா, சர்ஃபாடின் இடி – ஹைதராபாத், மோ. சாதிக் ஷேக் – மகாராஷ்டிரா, மோ. ஆரிப் ஷேக் – மகாராஷ்டிரா, அக்பர் சௌத்ரி – மகாராஷ்டிரா, ஃபசல் துரானி – மகாராஷ்டிரா, நௌஷாத் சையத் – கர்நாடகா, அகமது பரேல்வி – கர்நாடகா, ரஃபிக் அஃபிடி – குஜராத், அமீன் ஷேக் - மத்திய பிரதேசம், மோ. மொபின் கான் - மத்திய பிரதேசம்.
மோ. அன்சார் – கேரளா, கியாசுதீன் அன்சாரி – புஜ்வஸ்த், ஆரிஃப் காஜி- குஜராத், உஸ்மான் – குஜராத், யூனுஸ் மன்சூரி – குஜராத், இம்ரான் பதான் – ராஜஸ்தான், அயுப்சர் ஷேக் – உத்தரப்பிரதேசம், அவ்யாஸ் சமேஜா - குஜராத், சைஃப் அன்சாரி - உத்தரப் பிரதேசம், மோ. சைஃப் ஷேக் – உத்தரபிரதேசம், ஜீஷன் ஷேக் – உத்தரப்பிரதேசம், ஜியாவுர் ரஹ்மான் - உத்தரப் பிரதேசம், தன்வீர் பதான் – உத்தரப்பிரதேசம், அப்ரர் மணியார் – உத்தரப்பிரதேசம், ஷாதுலி கரீம் – கேரளா, தௌசிப் பதான் – மகாராஷ்டிரா, மோ. அலி அன்சாரி - மத்திய பிரதேசம், மோ. இஸ்மாயில் – குஜராத், கமருதீன் - மத்திய பிரதேசம், ஆலிம் காசி - மத்திய பிரதேசம், அனிக் சையத் – மகாராஷ்டிரா, மோ. ஷகீல் – உத்தரபிரதேசம் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.