அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி! DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Published : Mar 11, 2024, 05:55 PM ISTUpdated : Mar 11, 2024, 05:56 PM IST
அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி! DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

சுருக்கம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றிக்காக டி.ஆர்.டி.ஓ. (DRDO) விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளையும் பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், "MIRV தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றி பெற்றுள்ளது. இது DRDO விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!