பெங்களூரு ஏரோ இந்தியா 2023ல் கண்ணைக் கவரும் டிஆர்டிஓ தயாரிப்பான டபாஸ் ட்ரோன்!!

Published : Feb 16, 2023, 04:28 PM IST
பெங்களூரு ஏரோ இந்தியா 2023ல் கண்ணைக் கவரும் டிஆர்டிஓ தயாரிப்பான டபாஸ் ட்ரோன்!!

சுருக்கம்

பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா 2023ல் ட்ரோன்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. யெலஹங்கா விமான தளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட டபாஸ் பிஹெச் ட்ரோன் கவனத்தை ஈர்த்துள்ளது.  

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர், அர்மேனியா - அஜர்பைஜான் மோதல் ஆகியவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், எல்லையில் இவர்களை எதிர்கொள்ள இந்தியாவும் ஆளில்லா விமானங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிய ஆளில்லா விமானங்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. இவை சுட்டு வீழ்த்தப்பட்டன.

பெங்களூரில் நடந்து வரும் ஏரோ இந்தியா 2023ல், டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல்-எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் (ஈசிஎஸ்) பி.கே.தாஸிடம், டபாஸ் பிஹெச் பற்றி விரிவாக ஏசியாநெட் விவாதித்தது. எவ்வாறு போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுகிறது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

Aero India 2023 : ஏரோ இந்தியா கண்காட்சியில் அசத்திய உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸி !!

அப்போது தாஸ் கூறுகையில், "டபாஸ் என்பது ஆளில்லா ட்ரோன். இது பல்வேறு ஆய்வகங்களுடன் இணைந்து எங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, குறிப்பாக டெல் (DEL) இதற்கான முழு தரவு இணைப்பையும் வழங்கியது. கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொறியியல் நுட்பங்களை வழங்குகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடார் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் ரேடார்களை உருவாக்குகிறது. பாதுகாப்பு மின்னணுவியல் ஆராய்ச்சி ஆய்வகம் சீதோஷண நிலையை அறிவதற்கான  அமைப்புகளை உருவாக்குகிறது. இவற்றுக்கு பைலட் தேவையில்லை மற்றும் மிக உயரமான இடங்களிலும் பறந்து விரிந்து வேகமாக பறக்க முடியும். புகைப்படங்களையும் எடுக்கும்.

"இது முழுமையான மின்சாதன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. செயற்கை ரேடார் சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் கண்காணிக்க முடியும். 

ஏரோ இந்தியா 2023: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கான உடை!

"எந்தக் கதிர்வீச்சும், டபாஸ் ட்ரோனுக்கு சிக்கல்களை உண்டாக்கும். ஆனால், அந்த கதிரியக்கத்தையும் இந்த ட்ரோன் எதிர்கொள்ளும். சுய பாதுகாப்பு தொகுப்பைக் கொண்டுள்ளது. டபாஸ் சென்சார்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. பல நாடுகள் இதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான் எந்த நாட்டையும் தற்போது குறிப்பிட முடியாது'' என்று தாஸ் கூறினார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!