பலி கணக்கை எண்ணத் தொடங்கிய கோடை வெப்பம் - மஹாராஷ்டிராவில் 5 பேர் பலி 

First Published Mar 30, 2017, 5:32 PM IST
Highlights
5 Dead In Maharashtra As Heat Wave Sweeps Through Parts Of India


மஹாராஷ்டிராவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது இயல்பைக் காட்டிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, உள்ளிட்ட 9 பெருநகரங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

வெப்பத்திற்கு மனிதர்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் மஹாராஷ்டிராவில் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கடலோரப் பகுதி மற்றும் ஒரிசாவில் கடந்தாண்டு மட்டும் 1500க்கும் அதிகமானோர் வெப்பத்திற்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!