கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மருத்துவர் ராவ் என்பவரின், டெபிட் கார்டிலிருந்து ரூ.40 கு பதிலாக, 4 லட்சம் ரூபாயை டோல்கேட்டில் ஸ்வைப் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்சசியை கிளப்பியுள்ளது.
மைசூரில் வசிக்கும் மருத்துவர் ராவ், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு காரில் சென்றுள்ளார் . அப்போது, அந்த நெடுஞ்சாலையில் உள்ள குண்ட்மி டோல்கேட்டை கடக்கும் போது கட்டணமாக ரூ.40 கேட்கப்பட்டுள்ளது. அப்போது தன்னிடம் இருந்த டெபிட் கார்டை பயன்படுத்தி உள்ளார் .
அதில் ரூ.40 கு பதிலாக, 4 லட்சம் ரூபாய் என பதிவு செய்து ஸ்வைப் செய்துள்ளார் அந்த ஊழியர்.பின்னர் அவருடைய வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் குறைந்துள்ளதாக மருத்துவர் ராவுக்கு மேசேஜ் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இருந்த போதிலும் அந்த ஊழியர் அவருடைய தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை .
ஒரு கட்டத்தில், செய்வதறியாது பணத்தை பறிகொடுத்து நின்ற மருத்துவர் ராவ் ,டோல்கேட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் நள்ளிரவு 1 மணிக்கு புகார் தெரிவித்துள்ளார் .
பின்னர் டோல்கேட்திற்கு விரைந்த தலைமை காவலர் மேற்கொண்ட விசாரணையில் தன் தவறை ஒப்புக்கொண்டார் ஊழியர். பின்னர் தவறுதலாக ஸ்வைப் செய்த பணத்திற்கு “செக்” கொடுக்க முற்பட்டுள்ளார் டோல் கேட் அதிகாரி . ஆனால் செக் வாங்க மறுத்த மருத்துவர் ராவ் , விடியும் வரை காத்திருந்து தலைமை காவலரின் உதவியோடு ஒரு வழியாக 3,99,960 ரூபாயை ரொக்கமாக பெற்று தன் பயணத்தை தொடர்ந்துள்ளார். ரொக்கமாக பணத்தை பெரும் போது, விடியற்காலை 4 மணி என்பது குறிப்பிடத்தக்கது
எப்படியோ பணத்தை பெற்றுவிட்டோம் என பெருமூச்சிவிட்ட மருத்துவர் ராவ், தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார் . இதிலிருந்து என்ன தெரிகிறது எதற்கெடுத்தாலும் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் மிகுந்த கவனதுடன் இருந்தால் நல்லது .
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது, நம் வங்கி கணக்கிலிருந்து எவ்வளவு ரூபாய் குறைந்துள்ளது என்பதை சரி பார்த்துக் கொள்வது நல்லது .