
குடித்துவிட்டு பைக், கார் ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும், விபத்து ஏற்படுத்தி உயிர்பலி ஏற்பட்டால், ஜாமினில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவும், 10 ஆண்டு சிறையும் விதிக்க மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்டு, இதுபோன்ற குற்றங்களை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் விபத்து ஏற்படுகிறது. அவ்வாறு விபத்து ஏற்படுத்தினால், கவனக்குறைவு என்ற ரீதியில் அபராத்துடன் விட்டுவிடாமல், இந்திய குற்றவியல் சட்டம் 299 பிரிவின்படி, உள்நோக்கத்துடன், தெரிந்த குற்றம் செய்தார் என்ற பிரிவில் அவரை கைது செய்து அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில முக்கியமான பரிந்துரைகளையும் அளித்துள்ளளது. அவை
இந்த பரிந்துரைகள் விரைவில் அமலக்கு வரும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.