பூரி ஜெகநாதர் கோயில் அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்ட 1 வயதுக்குட்ட குழந்தைகள்.. லட்சங்களில் சம்பளம்..

Published : Jun 16, 2023, 05:43 PM IST
பூரி ஜெகநாதர் கோயில் அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்ட 1 வயதுக்குட்ட குழந்தைகள்.. லட்சங்களில் சம்பளம்..

சுருக்கம்

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூரி ஜெகநாதர் கோயில் அர்ச்சகராக சேவை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில், பழங்கால பாரம்பரியத்தின் படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அர்ச்சகராக சேவை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இந்தப் குழந்தைகள் அர்ச்சகர் பணிக்கு மட்டும் பணியாட்களாக முறையாக நியமிக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சிறுவர்களுக்கு சேவதார் பணிக்காக ஆண்டுதோறும் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கோவில் மூலம் சம்பளம் வழங்கப்படும். பாலதேப் தஷ்மோகபத்ரா மற்றும் ஏகான்ஷு தஷ்மோஹாபத்ராவின் வயது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் இப்போது பூரி ஜெகநாதர் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றுவார்கள்.

10 மாத குழந்தை பாலதேப், ஒரு வயது எகான்ஷு மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை ஆகியவை புதன்கிழமை ஜெகன்னாதர் கோவிலின் அர்ச்சகர்களாக அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் ரத யாத்திரையின் போது முக்கிய சடங்குகளை செய்யும் அர்ச்சகர்களின் ஒரு முக்கிய வகையான தைதபதி நிஜோக் வகையை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் அவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மொத்த ஆண்டு சம்பளம் பெறலாம். ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் முறையாக அனுமதிக்கப்பட்டாலும், கோவிலில் அவர்களின் சேவை 18 வயதுக்குப் பிறகுதான் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!