உலக கோப்பை போட்டியில் வேண்டுமென்றே தோனி சரியாக விளையாடவில்லை !! யுவராஜ் தந்தை பகீர் குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Jul 17, 2019, 10:03 PM IST
Highlights

உலக கோப்பை போட்டியில் கோலி புகழைக் கெடுக்க வேண்டுமென்றே  தோனி சரியாக ஆடவில்லை என  யுவராஜ் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. 

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியில் தோனி இடம் பிடித்தாலும், ரிஷப் பண்ட்  தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும், சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் உலகக் கோப்பை தோல்வி குறித்து தோனியைக் குற்றம் சாட்டியுள்ளார்.

தோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத்தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக் கூடாது என்பதுதான் தோனியின் எண்ணம் .தோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார் என கூறி உள்ளார்.

ஆனால், தோனி மீது யோகராஜ் குற்றம் சாட்டுவது முதன்முறையில்லை. ஏற்கனவே பலமுறை தோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 

click me!