மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் நீர் பிரம்மிச் செடியை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

 
Published : Mar 18, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் நீர் பிரம்மிச் செடியை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

சுருக்கம்

Which lay strewn about the medicinal properties of the plant water pirammic ending

நீர் பிரம்மி:

நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன.  இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

1.. நினைவாற்றலைத் தூண்ட:

நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

2.. நரம்பு தளர்ச்சி நீங்க:

நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.  மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.

3.. தொண்டை கரகரப்பு குணமாக:

நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.. கோழைக்கட்டு குணமாக:

நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.

5.. வீக்கங்கள் கரைய:

நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டு அதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.

 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!