நன்மையும் தீமையும் சேர்ந்தே கொடுக்கும் “பரங்கிக்காய்”…

Asianet News Tamil  
Published : Feb 25, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
நன்மையும் தீமையும் சேர்ந்தே கொடுக்கும் “பரங்கிக்காய்”…

சுருக்கம்

பரங்கிக்காயின் நன்மைகள்…

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை “சர்க்கரைப் பூசணி” என்றும் சொல்வர்.

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு.

குளிர்ச்சி உடம்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும்.

பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும்.

இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.

மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

பரங்கிக்காயின் தீமைகள்…

அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட்டால் இருக்கும் உடம்பும் போய்விடும்.

PREV
click me!

Recommended Stories

ஜிம், டயட் செய்தும் எடை குறையலையா? இந்த 5 தவறுகள் காரணமாக இருக்கலாம்
இதய நோயாளிகளே... வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்!