
ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு கறிவேப்பிலை இட்லி ஆகும். உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் கறிவேப்பிலை இட்லியை அனைவருமே காலை, இரவு வேளைகளில் சாப்பிடலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலை இட்லி செய்ய தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலைப் பொடி – 1 ஸ்பூன்,
இட்லிப் பொடி – 1 ஸ்பூன்,
இட்லி – 20,
நல்லெண்ணெய், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இட்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
* அடுத்து அதில் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி மசாலாவுடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
* சூப்பரான சத்தான கறிவேப்பிலை இட்லி ரெடி.
* இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
பயன்கள்
கறிவேப்பிலை சாப்பிடுவதால் முடி வளரும், வெண்மை நீங்கும்.
ரத்த சோகை தீரும்.
நன்கு பசி எடுக்கும்.