பால் + மஞ்சள் + மிளகு = நோய் எதிர்ப்பு சக்தி…

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 01:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பால் + மஞ்சள் + மிளகு = நோய் எதிர்ப்பு சக்தி…

சுருக்கம்

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது

*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

PREV
click me!

Recommended Stories

Vitamin B12 Deficiency in Women: பெண்களுக்கு பி12 குறைபாடு: கவனிக்க வேண்டிய 7 ஆரம்ப அறிகுறிகள்
Back and Neck Pain: முதுகு, கழுத்து வலி அதிகரிக்க இதுதான் காரணமா? தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்