நெற்றிப் பொட்டில்  விரல் வைத்து அழுத்தினால் என்ன நல்லது நடக்கும் தெரியுமா?

First Published Mar 22, 2018, 1:46 PM IST
Highlights
Do you know what will happen if you press the finger on the forehead?


நமது உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்துவற்கு தற்போது பல்வேறு மசாஜ் வழிமுறைகள் உள்ளன. அதில் நல்ல பலனை கொடுக்கும், அதே நேரத்தில் உற்சாகமான உணர்வை ஏற்படுத்தும் ஒரு வழி நெற்றிப் பொட்டில்  விரல் வைத்து அழுத்துவது.

எப்படி செய்வது?

உங்கள் இரு புருவங்களுக்கும் இடையே, அதாவது நெற்றிப்பொட்டில் விரலை வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், நன்றாக அந்த இடத்தை அழுத்திக் கொண்டு, சுமார் 3 செமீ அளவில் மேல்நோக்கி மசாஜ் செய்யுங்கள்.

சுமார் 45 முதல் 60 நொடிகள் இவ்வாறு செய்யவேண்டும்.

பலன் என்ன தெரியுமா?

**தாங்க முடியாத தலைவலியால் அவதிப்படுபவர்கள் இவ்வாறு செய்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

**ஏதேனும் ஒரு வியடத்தை செய்வதற்கு முன்னர் இவ்வாறு செய்தால் Concentration அதிகரிக்கும். 

**மன அழுத்தம் குறையும்.

**முகம், வாய் மற்றும் கண்கள் ஆகியவற்றிக்கு தொடர்புடைய செய்லபாடுகள் சிறப்பாக இருக்கும்.
 

click me!