நாசாவின் கூற்றுப்படி, பூமிக்கு அருகிலுள்ள வான்பொருள் என்பது சிறுகோள்கள், விண்கற்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையால் இயங்குகின்றன. அவை அவ்வப்போது பூமிக்கு அருகில் வருகின்றன. நாசா பல்லாயிரக்கணக்கான சிறுகோள்களின் இருப்பிடங்கள் மற்றும் சுற்றுப்பாதைகளைக் கண்காணிக்கிறது. அந்ந்த் திட்டத்தில் சுமார் 28,000 வான்பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன.