உதட்டில் தேன் தடவி, பாகிஸ்தானின் நாக்கில் விஷம் ஏற்றும் சீனா..! பதற்றத்தில் இந்தியா..!

Published : Aug 22, 2025, 04:16 PM IST

இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இப்போது சீனாவின் சாணக்யர் வாங் யி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீரை சந்தித்து வருகிறார். இதனால், இந்தியா பதற்றத்தில் உள்ளது.

PREV
13

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தற்போது பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த பிறகு, வாங் யி இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருடன் உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டார். பாகிஸ்தானில் ராணுவம், முனீரின் செல்வாக்கை சீன அரசு அங்கீகரித்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த சந்திப்பில் இருந்து தெளிவாகிறது. இப்போது வாங் யி உடனான முனீரின் இந்தச் சந்திப்பு இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.

முனீருக்கும், வாங் யிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் உற்று நோக்கி வருகிறது. மேற்கத்திய கூட்டணிகள், இந்தோ-பசிபிக் பகுதியில், குறிப்பாக அமெரிக்க ஆதரவு பெற்ற குவாட் நாடுகளுக்கு எதிரான முக்கிய செய்தியை வலுப்படுத்தும் முயற்சியாக இதனை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

23

வாங் யி, பாகிஸ்தானுக்கு சீனாவின் தொடர் ஆதரவளிப்பதை உறுதி செய்துள்ளார். இதனை பாகிஸ்தானும், சீனாவும் ஒரு சாதாரண சந்திப்பு என்று கூறுகின்றன, ஆனால் இது இந்தியாவுக்கு பல கவலைகளை எழுப்புகிறது. பாகிஸ்தான் இராணுவத்துடன், சீனாவின் நேரடி தொடர்பு சிவில் நிறுவனங்களைத் தவிர்ப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் கருதுகின்றன.

வாங் யி, முனீர் இடையேயான இந்த சந்திப்பில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தானில் சீனப் பாதுகாப்புப் படைகளை விரிவுபடுத்தக்கூடும் என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது. பாகிஸ்தானில் போராடும் பலூச் விடுதலை இராணுவத்துக்கும் பேரிடியாக அமையும். இந்திய எல்லைக்கு அருகில் சீனா, பாகிஸ்தானின் இருப்பு பல கவலைகளை எழுப்பும் என்று கூறப்படுகிறது.

33

ஆசியாவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும், குவாட் நாடுகள், மத்திய கிழக்கு கூட்டாளிகளுடனான இந்தியாவின் முக்கிய உறவுகளையும் எதிர்கொள்ள, சீனா-பாகிஸ்தான் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வாங்-முனீர் சந்திப்பு ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று பார்வையாளர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானுக்கு சீனாவின் வெளிப்படையான இராணுவ ஆதரவு இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஒரு சவாலாக உள்ளது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரை சந்தித்த பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானைப் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் உறுதியான, நம்பகமான நண்பர்களாக நிற்கும் சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நம்பிக்கை, விசுவாசப் பிணைப்பு இருப்பதாக வாங் தெளிவாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் மீதான சீனாவின் இந்த அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories