விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்புவகிறவர்கள் மிகவும் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, பூமிக்குத் திரும்பியபின் விண்வெளி வீரர்கள் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எலும்பு மற்றும் தசைச் சிதைவு, கதிர்வீச்சு தாக்கம், பார்வைக் குறைபாடு மற்றும் உளவியல் ரீதியான தனிமையுணர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை எதிர்கொள்வதற்கு விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பிறகும் பிரத்யேகமான கவனிப்பு தேவைப்படுகிறது.
நீண்டகாலம் விண்வெளியில் இருந்துவிட்டு வந்தவர்கள், பூமியில் இயல்பாக நடக்கவும், செயல்படவும் கஷ்டப்படுவார்கள். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இருக்காது. புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் இருந்திருப்பதால், எலும்புச் சிதைவு கூட ஏற்படக்கூடும்.