பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் இப்போது பாகிஸ்தானில் இன்னும் சக்திவாய்ந்தவராக மாறிவிட்டார். அந்நாட்டு அரசு ஒரே நேரத்தில் முனீரை பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும், இராணுவத் தலைவராகவும் நியமித்துள்ளது. இரண்டு பதவிகளின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த முடிவை அங்கீகரித்தார். இதனால் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபில் அதிகாரங்கள் குறைந்துள்ளது.
இந்த முடிவுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சம்மதித்து இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம், பிரதமரின் பல பாரம்பரிய அதிகாரங்களை பறித்த ஒரு அரசியலமைப்புத் திருத்தம். இப்போது பாகிஸ்தானின் ஆட்சியை முன்பை விட இராணுவம் தன் கைகளில் உறுதியாக வைத்துள்ளது. ஷாபாஸ் ஷெரீப்பும், அடுத்து வரும் ஒவ்வொரு எதிர்கால பிரதமரும், இந்த ஐந்து முக்கிய சக்திகளை இழக்க உள்ளனர்.