ஆப்டிமஸ் ரோபோவால் மிகவும் நுட்பமான அறுவைசிகிச்சைகள் உள்பட எந்தவொரு மருத்துவ நடைமுறையையும், ஏன் மனிதர்களால் செய்ய முடியாத மிகக் கடினமான விஷயங்களைக்கூட செய்ய முடியும் என்று மஸ்க் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சுகாதாரத் துறையில் உள்ள மிகப் பெரிய தடை உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் எனக் குறிப்பிட்டார்.
“உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்கள் மரத்தில் காய்ப்பதில்லை. ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுவார்கள்," என்று மஸ்க் கூறினார்.