பயண நேரக் குறைப்பு:
இப்போது நோர்வேயின் இரண்டு பெரிய நகரங்களான ஸ்டாவஞ்சர் மற்றும் பெர்கன் இடையே பயணிக்க 11 மணிநேரம் வரை ஆகிறது. சுரங்கப்பாதை நிறைவடைந்தவுடன், பயண நேரம் சுமார் 40 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஸ்டாவஞ்சர் நோர்வேயின் நான்காவது பெரிய நகரமாகும், பெர்கன் இரண்டாவது பெரிய நகரமாகும், எனவே இந்தத் திட்டம் தொழிலாளர்கள் தினசரி ஸ்டாவஞ்சர் அல்லது பெர்கனுக்குப் பயணிக்கும் போது அவர்களின் பயண நேரத்தையும் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ரோக்ஃபாஸ்ட் சுரங்கப்பாதை திட்ட மேலாளர் ஒட்வார் கார்மோ தெரிவித்துள்ளார்.