ப்ரோமோவின் இறுதியில், குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது. ஆனந்தி, "இந்த பணத்தை வாங்கிக்கோங்க.” என சொல்ல அதற்கு அவரின் மாமியார், ”அவன் தான் கஜானாவ உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போயிட்டான்ல, நீயே பார்த்துக்கோ நிர்வாகத்தை" என்று கூறி, பணத்தை வாங்காமல் சென்றுவிட்டார்.
ஆனந்தி எப்படி இந்தச் சவால்களைச் சமாளித்து குடும்ப நிர்வாகத்தை வழிநடத்தப் போகிறாள்? சென்னை பயணத்தில் என்னென்ன உண்மைகள் வெளிவரும்? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுடன் இன்று இரவு 9:30 மணிக்கு இந்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.