அந்த வகையில் தற்போது D2D என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. Direct to Device என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட உங்களால் அவசரகால அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நேரடியாக சேட்டிலைட் உதவியோடு சிக்னல் இல்லாத இடங்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தான் D2D என்று BSNL விளக்கம் அளிக்கிறது. செல்போன் அழைப்பு மட்டுமல்லாது UPI மூலம் பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் இதனை சாத்தியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.