ஸ்மார்ட்போன் சலிப்பு: ஸ்மார்ட்போன்களால் மக்கள் அலுத்துவிட்டனர். சமூக ஊடகங்கள் மற்றும் பிற நோட்டிஃபிகேஷன்கள் காரணமாக, மக்கள் நாள் முழுவதும் தங்கள் மொபைலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் போன் பேசுவதற்கு குறைவாகவும், சமூக வலைத்தளங்களைப் பார்க்க அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நாள் முழுவதும் செல்போன் பிடியில் இருப்பது போல மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இந்த மன அழுத்தத்தைத் தவிர்க்க, மக்கள் மீண்டும் ஃபீச்சர் போன்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.