அம்பானி போட்டுக்கொடுத்த பிளான்: அப்படியே பாலோ செய்த Airtel! விலை குறைந்த ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆப்பு

Published : Aug 20, 2025, 08:34 AM IST

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்: ஏர்டெல் தனது பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஜியோவின் வழியைப் பின்பற்றி 1ஜிபி டேட்டா அடிப்படைத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனால், இனிமேல் பயனர்கள் அதிக விலை திட்டங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

PREV
15
தொடக்க நிலை திட்டத்திற்கு குட்பை சொன்ன ஏர்டெல்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே ஜியோ 1ஜிபி தினசரி டேட்டா வழங்கும் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஏர்டெல்லும் அதே பாதையில் சென்றுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் இந்த திட்டம் பயனர்களுக்கு கிடைக்காது. இதனால் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இனிமேல் அதிக விலை கொண்ட தொகுப்புகளைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

25
ஏர்டெல்லின் தற்போதைய அடிப்படை திட்ட விவரங்கள்

தற்போது ஏர்டெல் ரூ.249க்கு 24 நாட்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதால், பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.319 திட்டத்தை எடுக்க வேண்டியிருக்கும். இந்த புதிய திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 

ஜியோவும் இதேபோல் 1ஜிபி தொடக்க நிலை திட்டத்தை அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இப்போது ஜியோவில் 28 நாட்களுக்கு ரூ.299 (1.5ஜிபி/நாள்), ரூ.349 (2ஜிபி/நாள்) திட்டங்கள் மட்டுமே உள்ளன.

35
வோடபோன் ஐடியாவின் நிலை என்ன?

தற்போது வோடபோன் ஐடியா ரூ.299க்கு தினமும் 1ஜிபி டேட்டா திட்டம் வழங்குகிறது. ஆனால் ஜியோ, ஏர்டெல் ஏற்கனவே மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், வோடபோன் ஐடியாவும் இதே பாதையில் செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடனில் தத்தளிக்கும் இந்த நிறுவனத்திற்கு வருவாய் அதிகரிப்பு அவசியமாகிறது. எனவே மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

45
தொடக்க நிலை திட்டங்களில் ஏன் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன?

தொலைத்தொடர்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தொடக்க நிலை திட்டங்களை நீக்குவதன் முக்கிய நோக்கம் ARPU (Average Revenue Per User) அதிகரிப்பதுதான். தற்போது ஜியோ பயனர்களில் 20-25 சதவீதம் பேரும், ஏர்டெல் பயனர்களில் 18-20 சதவீதம் பேரும் 1ஜிபி தொடக்க நிலை திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் புதிதாக 1.5ஜிபி அல்லது 2ஜிபி டேட்டா திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், அந்தந்த நிறுவனங்களின் வருவாய் 4 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
பயனர்கள் மீது கூடுதல் சுமை

குறைந்த டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்கள் மீது இந்த முடிவு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவரை குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50-70 வரை கூடுதலாகச் செலவாகும்.

ஆனால் நிறுவனங்களின் கூற்றுப்படி, 5G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பயனர்களின் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே குறைந்த டேட்டா திட்டங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபத்திற்காக இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories