பெண் விடுதலைக்காக போராட்டம்
காந்தியின் கொள்கைகளில் பெரியாருக்கு ஈடுபாடுகள் இருந்தது. இதனால் 1919- ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். பல போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். அதன் பின்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சென்னை மாகாணத்தில் 1922 -ஆம் ஆண்டு பொறுப்பெற்றனர். பெரியார் அரசு பணியிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸ் கட்சியை விட்டு 1925-ம் ஆண்டு விலகினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் தொடர்ந்து போராடினார்.