தமிழகத்தில் இனி மழை கிடையாது! ஆனால்! ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!

Published : Jan 04, 2025, 02:39 PM ISTUpdated : Jan 04, 2025, 02:44 PM IST

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு வடகிழக்கு பருவமழை விலகும் என்றும், கடலோர மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

PREV
16
 தமிழகத்தில் இனி மழை கிடையாது! ஆனால்! ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தான் வட கிழக்கு பருவமழை விலகும் எனவும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

26
Tamilnadu Weather Update

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

36
Tamilnadu Rain

அதேபோல் 6ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. 7 முதல் 9ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

46
Heavy Rain

வரும் 10ம் தேதி  கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. 

56
Chennai Fog

சென்னையில் பனிமூட்டம் காணப்படும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. 
 

66
fisherman

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு  35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அதேபோல், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories