தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை அறிவிப்பு தெரியுமா? பொதுமக்கள் கவனம்!

Published : Mar 11, 2025, 08:01 PM IST

தமிழகத்தில் நாளை 12 ஆம் தேதி புதன்கிழமை ஒரு சில பகுதிகளில் மின் தடை இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை அறிவிப்பு தெரியுமா? பொதுமக்கள் கவனம்!

Full-time power outage tomorrow: Which areas in Tamil Nadu will have power cuts? : தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் கோடை காலம் தொடங்கிவிட்டால், ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின் சாதங்களின் பயன்பாடும் அதிகரிக்கும். மேலும், மின் தேவையும் அதிகளவில் ஏற்படும். அதிலேயும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4 ஆம் தேதி 28ஆம் தேதி வரையில் நீடிக்கும். இன்னும், அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பராபரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும்.

25
Tamil Nadu Power Shutdown Alert

எனவே கோடை காலங்களில் மின் தடை இருக்க கூடாது என தமிழக மின் வாரியம் சார்பாக பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காகவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.

35
Tamil Nadu Power Shutdown, Tamil Nadu Electricity

எனவே மின் தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளி மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

45
Power Cut Alert, Tamil Nadu EB Update

எனினும் தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் நாளை 12 ஆம் தேதி புதன்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி திருச்சியில் தில்லைநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

55
Power Shutdown Areas, Full-Day Power Cut

இதன் காரணமாக திருச்சி தில்லை நகர் முதல் கிராஸ் மேற்கு, 2ஆவது கிராஸ், ஒன்று முதல் ஐந்து கிராஸ் வரை, தேவர் காலனி சாலை, சாஸ்திரி ரோடு, தி மலைக்கோட்டை காலனி, ல்லை நகர் சந்திப்பு முதல் மாரிஸ் மேம்பாலம் வரை, வடக்கு விஸ்தரிப்பு, ரோடு கிழக்கு, அண்ணாமலை நகர் ஒரு பகுதி, கரூர் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் மின் தடையை கருத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருப்பது அவசியம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories