இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் மனைவி சுவேதா, அவரது தந்தை அமுல்ராஜ் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வேலை இல்லாத ராகவன் மது பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று சுவேதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். எனவே இது தொடர்பாக சுவேதாவின் தந்தை அமுல்ராஜ் பலமுறை ராகவனை அழைத்து பேசிய நிலையிலும் ராகவன் திருந்தவில்லை.