இந்த நிலையில் தான் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், நேற்று சட்டமன்றத்தில் தைவான் தொழில்பூங்கா பற்றி பேசினோம். இன்று கையெழுத்தாகியிருக்கிறது. ஜவுளி, காலணி பாகங்கள், எலக்ட்ரானிக் பாகங்கள் போன்ற முக்கியமான துறைகளில் கிட்டத்தட்ட 20000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாக ரூ.1000 கோடியை முதலீடாக ஈர்ப்பதை தமிழக அரசு லட்சியமாக கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இறுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கிய காரணமாக இருந்த TCC சென்னையின் தலைவர் எரிக் சாங் மற்றும் தைவான் வர்த்தக சபை இந்தியாவின் துணை பொது தலைவர் சைமன் லீ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.