தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, இனி மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த கூட்டங்களில் பள்ளிக் கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வியின் செயல் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் நிலையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இனி மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
24
பள்ளிக்கல்வித்துறை
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறும். இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.