தமிழ்நாட்டில் கணிசமான விவசாய நிலங்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. எனவே, தேக்கி உள்ள நீரைத் திறந்துவிடுவதற்கான மாநிலத்தின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வைத்தியநாதன் வலியுறுத்தினார். கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "நிர்ணயிக்கப்பட்ட 9,000 கன அடிக்கு எதிராக, ஆகஸ்ட் 30-ஆம் தேதி 9,888 கன அடி நீரை மாநிலம் திறந்துவிட்டுள்ளது ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து கர்நாடகா நீர் திறப்பை 11,000-லிருந்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளதை நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
காவிரி நீர் திறப்பு தொடர்பான CWMA-வின் உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு முன்னதாக உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. போதிய நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்படும் என்ற கவலையின் மத்தியில், தனக்குரிய காவிரி நீரைப் பெற தமிழ்நாடு போராடி வருகிறது.