வெப்ப அலை- அலறும் மக்கள்
ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 105 டிகிரிகளுக்கு மேல் வெயிலானது வாட்டி வதைத்தது. மத்திய அரசும் தமிழக அரசும் அடுத்தடுத்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் முற்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இருந்த போதும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஏற்காடு என குளுகுளு இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.