தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி வருகின்ற 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 084 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4.46 லட்சம் மாணவர்களும், 4.40 லட்சம் மாணவிகளும் அடக்கம்.