பிரம்மச்சரியம், ஒரு வேளை உணவு, வெறும் தரையில் தூக்கம், செருப்பின்றி நடை என ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிப்பவருக்கு சனி தோஷம் வராது. ஒரு நபரை ஏழரை ஆண்டுகள் சனி தோஷம் துன்பப்படுத்துகிறது. ஐயப்பனுக்கு விரதமிருக்கும் பக்தர்களை சனியால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு பதிலாக தன்னுடைய பக்தர்கள் சனியுடன் தொடர்புடைய கருப்பு அல்லது நீல நிற உடைகளை அணிவார்கள் என ஐயப்பன், சனிக்கு உறுதியளித்ததாக நம்பப்படுகிறது. இதுவே ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கு காரணமாகும்.