மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் கொலை வரை கொண்டு விடக் கூடிய பிரச்சனை சொத்து தொடர்புடையது. உடன் பிறந்தவரோ, நெருங்கிய நண்பரோ யாராக இருந்தாலும் சொத்து என்று வருகிறபோது சிக்கல் சுமுகமாக தீர்வதில்லை. எல்லை தகராறு, ஆவணங்கள் சார்ந்த பிரச்சனைகள் மனதையும் பாதிக்கக் கூடியது. சிலர் வழக்கு தொடர்ந்துவிட்டு நீதிமன்றத்திற்கு நடையாய் நடப்பர். நம்முடைய சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிய புதன் அனுகிரகம் தேவை.