வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் குறிப்பிட்ட செடியை வளர்ப்பது பணத்தட்டுப்பாட்டைக் குறைத்து, செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த செடி எதிர்மறை ஆற்றலை அகற்றி, குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
வீட்டில் செடிகள் வளர்ப்பது சுற்றுச்சூழலுக்காக மட்டுமல்ல, மன அமைதிக்கும் நல்ல ஆற்றலுக்கும் உதவுகிறது என்று பலர் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக சில செடிகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் அப்படிப்பட்ட ஒரு செடி தான் “வெற்றிலை செடி”.
25
வாஸ்து செடி
இந்திய பாரம்பரியத்தில் வெற்றிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. திருமணம் முதல் சிறிய பூஜை வரை வெற்றிலை இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. ஆன்மிக ரீதியாகவும் இது நல்ல சக்தியை ஈர்க்கும் செடியாக பார்க்கப்படுகிறது. வாஸ்து நிபுணர்கள் கூறுவதன்படி, வீட்டில் வெற்றிலை செடி செழித்து வளர்ந்தால் அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு குறைந்து, செல்வ வளம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
35
வெற்றிலை செடி
குறிப்பாக சனி தோஷம் அல்லது தொடர்ந்து பண நெருக்கடியை அனுபவிப்பவர்கள் இந்த செடியை வீட்டில் வளர்ப்பது நல்ல பலனை தரும் என்று சிலர் கூறுகின்றனர். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை சூழலை உருவாக்கும் சக்தி இந்த செடிக்கு இருப்பதாக பாரம்பரிய நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும் என்றும் நம்பப்படுகிறது.
வாஸ்துப்படி இந்த செடியை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வளர்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் சூரிய ஒளி நன்றாக கிடைப்பதால் செடி ஆரோக்கியமாக வளரும். “செடி எவ்வளவு செழித்து வளருகிறதோ, அவ்வளவு செல்வ வளமும் பெருகும்” என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
55
லட்சுமி கடாட்சம்
மேலும், சில பாரம்பரிய நம்பிக்கைகளில் வெற்றிலை செடி இருக்கும் இடத்தில் ஹனுமான் மற்றும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கடன் சுமை குறையவும், வீட்டில் நல்ல சக்தி நிலைக்கவும் இந்த செடியை வளர்க்க வேண்டும் என்று பலர் பரிந்துரைக்கின்றனர். இந்த தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் வாஸ்து கருத்துகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை ஆகும்.