மேலும் திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதத்தில் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸ் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம். டோக்கன் பெற்ற அன்றைய தினத்தில் அல்லது அடுத்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.