இந்த தலத்தின் மிகப் பெரிய ஐதீகம், முருகன் இங்கு பிரம்மச்சாரி நிலையில் திருவுருவமாக இருக்கிறார் என்பதுதான். முருகனின் இந்த வடிவம் மிக அரியதாக கருதப்படுகிறது. மனக்கவலைகள் தீர்வு பெற, விரதத்துடன் வணங்குபவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இங்கே வரும் பக்தர்கள் தங்களின் குறைகளை விளக்கி பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பாபிஷேகம், திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
இங்கு பின்பற்றப்படும் முக்கியமான விதிகளில் ஒன்று, பெண்களுக்கு இந்த தெய்வத்தை தரிசிக்க அனுமதி இல்லை என்பதுதான். காரணம், பிரம்மச்சாரி சுருபத்தில் எழுந்தருளியிருப்பதால், அந்த மரபு தலைமுறைகளாக தொடரப்படுகிறது. இதுபோன்ற மரபு மகாராஷ்டிராவில் மட்டுமல்லாது, வடஇந்தியாவில் உள்ள சில முருக தலங்களிலும் காணப்படுகிறது.