பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

First Published Apr 7, 2023, 10:13 AM IST

துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும். ஆனால் எந்த திசையில் வளர்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. 

துளசி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. உங்கள் வீட்டில் துளசி செடி பச்சையாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், இல்லறம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும். இப்படிப்பட்ட வீடுகளில் லட்சுமியும் வாசம் செய்கிறாள். உங்கள் வீட்டில் லக்ஷ்மியின் அருள் நிலைத்திருக்க, துளசியை சரியான திசையில் வைப்பது அவசியம். துளசி திசையின் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என வாஸ்துவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துளசி செடியை வளர்ப்பதை விடவும், அதனை சரியான திசையில், சரியான இடத்தில் வைத்தால், உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து நிதி நிலை பலப்படும். துளசி ஒவ்வொரு வீட்டு முற்றத்திற்கும் அழகு என்று கருதப்படுவதற்கு இதுவே காரணம். துளசி செடி காய்ந்த காணப்படும் வீடுகளில் நாளுக்கு நாள் நிதிச்சுமை அதிகரிக்கிறது. துளசி செடியை நடும் போது, ​​அது காய்ந்து போகாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும். துளசிக்கு தேவையான வெளிச்சம், காற்று, தண்ணீர், எந்த திசையில் நடவு செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

எந்த திசையில் துளசி வைக்க வேண்டும்? 

முன்னோர் துளசி செடியை வீட்டின் நடுவில் நடவு செய்யும் மரபு இருந்தது, அதனால் செடிக்கு போதுமான அளவு சூரிய ஒளி, காற்று மற்றும் நீர் கிடைக்கும். ஆனால் தற்போது வீடுகளின் அளவு முன்பை விட சிறியதாகவும், பெரிய நகரங்களை பொறுத்தவரை பிளாட் கலாச்சாரம் வந்துவிட்டதால் துளசி செடியை எங்கு நடுவது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் துளசி செடியை நடலாம். ஆனால் உங்கள் வீட்டின் பிரதான கதவுக்கு காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி படவில்லை என்றால், துளசி செடி காய்ந்துவிடும். அதனால் தான் அத்தகைய வீடுகளின் பால்கனியில் துளசி செடியை நடலாம். ஆனால் பால்கனியிலும் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தெய்வங்கள் இந்த இரண்டு திசைகளிலும் வாசம் செய்வதாக ஐதீகம். வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் துளசி நடவு செய்வது உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்கும். 

துளசியை நடவு செய்யக் கூடாத திசை! 

வாஸ்து விதிகளின்படி, தவறுதலாக கூட தெற்கு திசையில் துளசி செடியை நட வேண்டாம். இந்த திசை முன்னோர்களின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்த திசையில் துளசி செடியை நட்டால் அது வாடிவிடும். மகாலட்சுமி உங்கள் மீது வருத்தப்படுவார். இந்த திசை முன்னோர் வழிபாட்டிற்கு பயன்படுவதால், தவறுதலாக கூட துளசியை இங்கு நட வேண்டாம். 

இதையும் படிங்க: அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

குடும்ப அமைதி 

உங்கள் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டால், சமையலறைக்கு வெளியே துளசி செடியை வளர்க்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் உறவு மேம்படத் தொடங்கும், கணவன் மனைவிக்குள் காதல் வளர ஆரம்பிக்கும். 

பணம் குவிய துளசி!!

பணத்தை மிச்சப்படுத்த முடியாவிட்டால், உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு துளசி செடியை நடுங்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், லட்சுமியின் ஆசீர்வாதமும் பெருகும், மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். 

இதையும் படிங்க: வீட்டில் தரித்திரம் நீங்க! முதல்ல இந்த 1 காரியம் செய்து பாருங்க! செல்வம் குவிந்து கொண்டே இருக்கும்..

click me!