விஷ்ணு நாம மந்திரம்
”ஸ்ரீமன் நாராயணா, நாராயணா, நாராயணா”
எளிமையான முறையில் பெருமாளை வழிபட விரும்புபவர்கள் அவரது திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லலாம்.
ஸ்ரீ வெங்கடேச மந்திரம்
ஓம் ஸ்ரீ வெங்கடேசாய நமஹ..திருமலையில் அருள்பாலிக்கும் வெங்கடேஸ்வரர் பெருமாளை நினைத்து சொல்லப்படும் எளிய மந்திரம் இது.ம்குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லலாம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவை நினைத்து சொல்லப்படும் முக்கியமான மந்திரமாகக் கருதப்படுகிறது. பகவானின் திருநாமத்தை நினைத்து மனதை ஒருமுகப்படுத்துவதற்காக இதை சொல்லலாம்.
எளிய பொருள்: வாசுதேவனாகிய பகவானுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும்.
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய என்பது பெருமாளின் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்றாகும். இதை அஷ்டாக்ஷர மந்திரம் என்றும் அழைக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமையில் காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ அமைதியான இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்.
எளிய பொருள்: நாராயணப் பெருமானை வணங்குகிறேன் என்பதாகும்.