‘‘அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை; இரண்டும் உண்மையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளன’’ என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ‘‘இந்தியா நிச்சயமாக முன்னேறும், இந்தியா உலகிற்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி என்பது சுய முன்னேற்றம் மட்டுமல்ல. இன்று வளர்ந்த நாடுகளைப் பார்க்கும்போது, அவற்றின் வளர்ச்சி மிகவும் சிக்கலானதாக இருந்து அழிவையும் கொண்டு வந்துள்ளது. அனைத்து நாடுகளும் தாங்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.