மார்கழிப் பௌர்ணமி
மாதந்தோறும் பௌர்ணமியான முழுநிலவு வரும். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மற்றும் மார்கழி மாதத்தில் வரும் மார்கழிப் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து கிழமைகளிலும் பௌர்ணமி நாள் வரும். வெள்ளிக்கிழமையில் வரும் பொள்ணமி அம்மனுக்கு உகந்தநாளக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் சுக்ரன் உச்சத்தில் வீற்றிருப்பதால், களத்திர தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், சுக்கிர தசை நிகழும் ராசிக்காரர்களான ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள், மற்றும் பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரக்காரர்களும் சக்தி சொரூபினாயன துர்கை அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது நல்லது.