குரு பெயர்ச்சிக்கு முந்தைய காலத்தில் ஏற்படும் தடைகள், பண சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கால பைவர் வழிபாடு சிறந்த வழியாகும். பைரவரை, சரியான முறையில் வழிபட்டால், தடைகள் விலகி, தாமதங்கள் நீங்கி, குரு பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகளை உடனே பெறலாம்.
ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக குரு பெயர்ச்சி ஒவ்வொரு 12 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிகப் பெரிய நிகழ்வாகும். குரு பகவான் “ஞானம், கல்வி, செல்வம், பிள்ளை பாக்கியம், நற்பண்பு, தெய்வ அனுகிரகம்” ஆகியவற்றுக்கு காரணி. எனவே குரு பெயர்ச்சிக்கு முன்பும், பின்பும் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் குரு பெயர்ச்சிக்கு முந்தைய காலத்தில் சிலருக்கு தடைகள், பண சிக்கல்கள், வேலை நெருக்கடிகள், உடல் நலப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள், மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கும். இந்தத் தடைகளை உடைத்து, நன்மையை ஈர்க்கும் சிறந்த வழிபாடு கால பைரவர் வழிபாடு ஆகும்.
28
கால பைரவர் யார்?
கால பைரவர், சிவபெருமானின் உக்ர ரூபம். “காலம்” என்ற அதிசய சக்தியை கையில் வைத்திருப்பவர். வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு காரியமும் நேரத்துடன் தான் நெருக்கமாக தொடர்புடையது. சரியான நேரத்தில் நடந்த காரியமே வெற்றியைத் தருகிறது. ஆகவே காலத்தை கையில் வைத்திருக்கும் தெய்வம் என்ற காரணத்தால் பைரவரை வணங்கினால் தடைகள் விலகி, தாமதங்கள் நீங்கி, அதிர்ஷ்ட வாய்ப்புகள் திறக்கும். பைரவர் வழிபாடு செய்வது சைவ சமயத்தில் மட்டும் அல்லாமல், சகல சமயத்தவர்களும் செய்யக்கூடிய ஒரு தெய்வீக கருமமாக கருதப்படுகிறது.
38
ஏன் குரு பெயர்ச்சிக்கு முன் பைரவர் வழிபாடு?
குரு பெயர்ச்சி பலரின் ஜாதகத்தில் “அஷ்டமம், கேந்திரம், விரோத நிலை” போன்ற இடங்களில் இருந்தால் சிக்கல்கள் தரும்.அந்த சிக்கல்கள் வாழ்க்கையில் தடை, கடன், தாமதம், ஆரோக்கிய பிரச்சனைகள், வழக்கு சிக்கல்கள் என வெளிப்படும். பைரவர், தடைகளை சுலபமாக களைந்து விடும் சக்தி கொண்டவர். குரு தரும் சோதனைகளை குறைத்து, அதிர்ஷ்ட பலனை விரைவாக கொடுப்பார்.
இரவு நேர வழிபாடு : வாழ்க்கையில் தாமதமின்றி காரியங்கள் நடைபெறும்.
பைரவர் கோவிலில் சங்கடஹர ஹோமம் : பெரிய பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
88
தடையின்றி செல்லும் அதிர்ஷ்டப் பாதை
குரு பெயர்ச்சிக்கு முன் பைரவரை வழிபட்டால், குருவின் சோதனைகள் குறைந்து, அவர் தரும் நற்பலன்களை விரைவில் அனுபவிக்க வழி திறக்கும். தடைகள் கலைந்து, நன்மை தரும் நேரம் வந்துவிடும். அதனால்தான் சாஸ்திரங்கள் “குரு பெயர்ச்சிக்கு முன் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு கால பைரவர் வழிபாடு” என கூறுகின்றன. பைரவரை நம்பி வழிபடுபவரின் வாழ்க்கை, தடையின்றி செல்லும் அதிர்ஷ்டப் பாதையாக மாறும்.