November 29th - இன்றைய ராசிபலன் : 3 ராசிகரர்களே குழப்பம் வேண்டாம்.. கவனம் தேவை..

First Published Nov 29, 2022, 5:30 AM IST

Horoscope Today- Indriya Rasipalan November 29th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (29/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

இன்று நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள்.உங்கள் விருப்பப்படி கொடுத்த கடன் பணம் திரும்ப கிடைக்கும். இன்று ஒரு வேலையைப் பற்றி முடிவெடுப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம். இதுதொடர்பாக, அந்நியரை நம்புவது உங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
 

ஒரு முக்கியமான வேலை முடிவடையும். ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் இலக்கிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடும். உங்கள் மனதை அமைதியாக வைத்து கெட்ட நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். வீட்டின் பெரியவர்களிடமும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
 

நீங்கள் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு வட்டம அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி ரீதியாக உதவும். நிலம்-சொத்து, வாகனம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் வரலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புது. முக்கிய திட்டங்களைத் தொடங்குவதில் சில சிக்கல்கள் இருக்கும்.
 

இன்று சில விசேஷ காரியங்களைச் செய்து முடிக்க நினைத்தால், அவற்றைச் செயல்படுத்துங்கள். நிச்சயம் வெற்றிபெரும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. வீட்டில் புதிய பொருள் வாங்கும் வாய்ப்பும் உண்டு. மற்றவர்களால் நீங்கள் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும்.
 

எந்த ஒரு சங்கடமும் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்று எந்த தவறான இடத்திலும் முதலீடு செய்யாதீர்கள். தொழில் நடவடிக்கைகள் மேம்படும். உங்களின் வேலைப்பளு காரணமாக சில காலம் உங்கள் திருமண வைபவம் தள்ளிப்போகலாம்.
 

கல்வி தொடர்பான தடைகள் நீங்கி மாணவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடியும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். முயற்சிக்கு ஏற்ப சரியான பலனையும் பெறுவீர்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்.
 

இன்று எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், முதலில் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். சில சமயங்களில் மனதிற்குள் சில அமைதியின்மையும் எதிர்மறை எண்ணங்களும் எழலாம். வீட்டுப் பெரியவர்களின் எந்தப் பேச்சையும் அலட்சியப்படுத்தாதீர்கள்.
 

ஆன்மீக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் முழு நேரத்தையும் சில வேலைகளை திட்டமிடுவதில் செலவிடுவீர்கள். பங்குச் சந்தை, ஊக வணிகம் போன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள், ஏனெனில் ஒரு சில நெருங்கிய நபர்கள் மட்டுமே உங்களுக்கு துரோகம் செய்ய நேரிடலாம்.
 

இன்று, நெருங்கிய சிலரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பயணத் திட்டமும் சாதகமாக இருக்கும். சில நேரங்களில் அதீத நம்பிக்கை உங்கள் வேலையைத் தடுக்கலாம். சேமிப்பு சம்பந்தமான விஷயங்களில் ஓரளவு குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் தொழில் சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
 

இன்றைய நாள் மனதளவில் மிகவும் திருப்திகரமான நாள். அவசரப்படாமல் நிதானமாக வேலை செய்ய முயற்சி செய்யுங்கள். அதிகமாக விவாதிப்பதன் மூலம் சில முடிவுகள் உங்கள் கைகளில் இருந்து நழுவக்கூடும். வணிக நடவடிக்கைகளில் எங்கிருந்தோ கடன் வாங்கலாம்.
 

பல எதிர்மறை சூழ்நிலைகளையும் தீர்க்க முடியும். வீடு மற்றும் குடும்பத்தின் தேவைகளையும் கவனிப்பீர்கள். சகோதரர்களுடன் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும். மேலும், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, நிதானமாகப் பேசித் தீர்க்கவும்.
 

இளைஞர்கள் வேலையில் வெற்றி பெற்று நிம்மதி அடைவார்கள். மேலும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சிக்காக அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வரவும். உங்களின் நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையைப் பெறுவது ஓரளவு நிம்மதியைத் தரும். தொழில் நடவடிக்கைகள் முன்பு போல் தொடரும்.

click me!