சித்திரை கனி என்றால் என்ன?
சித்திரை கனி காண்பதற்கு மூன்று விஷயங்கள் தேவை. உங்கள் வீட்டில் ரூபாய் நோட்டு கட்டு இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை வைக்கலாம். இல்லாதபட்சத்தில் ஏதேனும் ஒரு ரூபாய் நோட்டோ, சில்லறை காசுகளையோ வைத்து கொள்ளலாம். இந்த தட்டில் பழங்கள், நகைகளையும் வைக்க வேண்டும். இதற்கு முன்பு கண்ணாடி ஒன்றினை வைத்து கொள்ளுங்கள். தமிழ் புத்தாண்டு தினத்தில் நீங்களும், குடும்பத்தினரும் காலையில் எழுந்ததும் தட்டில் இருக்கும் பழங்கள், பணம், நகை போன்றவற்றை தான் முதலில் காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மகாலட்சுமியை மனதார நினைத்து, பணத் தட்டை தொட்டு வணங்கி கொள்ளுங்கள். அதன் பின்னர் அன்றைய வேலைகளை செய்ய தொடங்குங்கள்.