இரண்டாவது செவ்வாய் ஹோரை!
இரண்டாம் செவ்வாய் ஹோரை, செவ்வாய்க்கிழமையன்று பகல் பொழுதில் 1 மணி முதல் 2 மணி வரை இருக்கிறது. அப்போது பச்சரிசியை சுத்தம் செய்து, அதனுடன் பச்சைப்பயிறு வெல்லம் ஆகிவற்றை கலந்து வீட்டு பூஜை அறையில் வீற்றிருக்கும் சுவாமி படத்தின் முன்பு வைக்க வேண்டும். பின்னர் " நாங்கள் கோமாதாவிற்கு செய்யும் இந்த தானத்தை ஏற்று எங்களுடைய கடன் சுமை குறைந்து நிம்மதியான வாழ்க்கை கிடைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் அருள் புரிய வேண்டிக்கொள்கிறோம்"என மனதினுள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி 2023... இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!! கூடவே நல்ல நேரமும் பொறக்க போகுது!!
உங்களுடைய வீட்டில் யாரின் பெயரில் அதிகமான கடனை வாங்கி இருக்கிறீர்களோ? அவர்களின் கையால் பாசிப்பயறு வெல்லம் கலந்த பச்சரிசியை கோமாதாவிற்கு தானமாக கொடுங்கள். பசு மாட்டிற்கு இந்த தானத்தை செய்த பிறகு தான் அன்றைய தினம் பகலில் உணவு சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் பணிக்கு செல்பவராக இருந்தால் காலையில் இதையெல்லாம் தயார் செய்து கையில் கொண்டு சென்று விடுங்கள். உங்கள் மனதிற்குள் எல்லாவற்றையும் பிரார்த்தனை செய்துவிட்டு, பணியிடத்திற்கு அருகில் உள்ள பசு மாட்டிற்கு வழங்கலாம்.