பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். கிரகத்தின் போது எந்த விதமான சுப காரியங்கள் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் கோயில் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று 29ம் தேதி அதிகாலை மணி 1.05 க்கு துவங்கி மணி 2. 22 வரை ஒரு மணி 17 நிமிட நேரம் சந்திர கிரகணம் நடைபெற்றது.